திருமண வீட்டில் அரங்கேறிய ஆடம்பரம்… இறுதியில் ஆடம்பரமே உயிரைப் பறித்த சோகம்!

641

பிரவீன்,சக்தி……………..

திருமணத்திற்கு பயங்கர மகிழ்ச்சியுடன் காத்திருந்த குடும்பம், இறுதியில் அவர்கள் அரங்கேற்றிய ஆடம்பரத்தினால் பரிதாபமாக சிறுவன் பலியாகியுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள முள்ளுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்.

விவசாயம் செய்து வந்த இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நலங்கு வைத்து சீர்வரிசை செய்யும் நிகழ்விற்காக உறவினர்கள் கூடியிருந்துள்ளனர்.

சீர்வரிசை கொண்டு வருபவர்களை வரவேற்பதற்காக கயிற்றில் வெடிகளை வரிசையாக கட்டி வெடித்துக்கொண்டிருந்த தருணத்தில்,


எதிர்பாராத விதமாக ஒரு வெடி பயங்கரமாக வெடித்ததில் பிரவீன்(6), சக்தி(6) என்ற இரண்டு சிறுவர்கள் வெடி விபத்தில் சிக்கியுள்ளனர்.

சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் சக்தி உயிரிழந்த நிலையில் பிரவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெடி விற்பனை செய்த இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், திருமண கொண்டாட்டத்தில் இருந்த கிராமத்தில் இப்படியொரு நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.