Wednesday, January 28, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில், வீட்டை சுத்தமாக வைக்காதது குறித்த தகராறு காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது கணவனை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சந்திரபிரபா (44) தம்பதிகள், அமெரிக்காவின் வடகரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசித்து வந்தனர். அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்; மனைவி சந்திரபிரபா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவருக்கும் வீட்டு சுத்தம் பற்றிய விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம்...
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் நவீன் கண்ணா (42). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி நிவேதிதா(30). இவர் பெரம்பூர் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் லவின்கண்ணன் (7). நேற்று நவீன்குமார் தனது தாய் புவனேஸ்வரியிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றவுடன் சிறிது நேரம் கழித்து புதிய எண்ணில் இருந்து...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற இரு வாலிபர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ராணிப்பேட்டை பனப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த அருண் (24) ஆகியோர் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். விடுமுறை நாளாக இருந்ததால், இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மதியம் குளிக்கச் சென்ற மணிகண்டனும் அருணும் திடீரென அதிகரித்த நீர்வெள்ளத்தில் அடித்துச்...
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகத்தை திருமணம் செய்துள்ளார். ஆனாலும், திருமணத்திற்குப் பிறகு ஆறுமுகம் பல பெண்களுடன் தொலைபேசி மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களின் மூலம் தொடர்பில் இருந்தது. இதனால் சந்தியா தேவி கோபமடைந்து, கணவரிடம் கேட்டபோதும், ஆறுமுகம் தொடர்புகளை “நல்ல நண்பர்கள்” என்று சமாளித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பெண் ‘நானும் உங்கள் கணவரும் 10 மாதங்களாக காதலித்து வருகிறோம்’ எனத்...
பள்ளி தாளாரும், அவரது மகனும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராதிகா, கடந்த 13 ஆண்டுகளாக வீரா ரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மழலையர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில், மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதிகாவின் உடலை...
தில்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருபது வயதான அந்த மாணவி, லட்சுமிபாய் கல்லூரிக்கு அருகில் ஒரு கூடுதல் வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் மாணவியின் இரண்டு கைகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன, எனினும் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின்...
கர்நாடக மாநிலம், பெங்களூரு திலக் நகரை சேர்ந்தவர் 35 வயதான சல்மா. இவருக்கு கடந்த சிலவருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வருடம் அவரது கணவர் உயிரிழந்த நிலையில் சல்மா தனது நான்கு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட சுப்பிரமணி அதனை காரணமாக வைத்து நெருங்கி...
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் படிப்பில் முன்னணியில் இருந்த மாணவரை கொலை செய்த சம்பவத்தில், சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது. காரைக்கால் நேருநகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (48). இவரது மனைவி மாலதி (40). இந்த தம்பதியரின் மகன் பாலமணிகண்டன் (13). பாலமணிகண்டன் காரைக்கால் நேரு நகரிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பில் படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, பள்ளி ஆண்டு...
இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி, நட்பு காதலாகி, கருத்து வேறுபாட்டால் சோகமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23), பிபிஏ படித்த இளைஞர். கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ (19) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், “இனி காதலை தொடர வேண்டாம்” என்று...
தந்தை ஒருவர் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூமில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங் ராமின் மகள் சம்பா பகத் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை விரும்பினார். ஏழை விவசாயியான பஜ்ரங் ராம் தனது மகளின் விருப்பத்தை...