Monday, January 19, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் . இவர் அதே பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா, மகன் தீபக், மகள் ஹரிணி. பிரகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்து வந்தது. இந்நிலையில் பிரகாஷ் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது இது...
எத்தனை கனவு கண்டிருப்பாள் அந்த சிறுமி. எதிர்கால வாழ்க்கை குறித்த அத்தனைக் கனவுகளும் பாழாய் போனது. உயிரிழந்த சிறுமிக்கு ஆசைப்பட்டது போலவே மூக்குத்தி போட்டு பாட்டி அழகுப்பார்த்ததைக் கண்டு உறவினர்கள் கதறியழுதனர். புதுச்சேரி மாநிலத்தில் ரெட்டியார்பாளையம் புதூர் அருகே விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் உயிரிழந்த சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி குத்த...
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக 9 மாத கைக்குழந்தையுடன் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மங்கை நல்லூர் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(30). ஹோட்டல் தொழிலாளியான இவருக்கும், சங்கீதா (25) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு 9 மாதத்தில் ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விக்னேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக...
சென்னையில் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). மேலும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்ற தோழியோடு சேர்ந்து திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார்...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி வந்த பெண்ணிடம் 13 பவுன் நகைகளை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜன். இவரது மனைவி பெனிட்டா (31). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,திருநெல்வேலியை சேர்ந்த சிவ சுப்பிரமணியன் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் போனில் பேசத் தொடங்கிய...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் 25 வயது ஷ்ரவன். இவர் இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கர்நாடகா சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு பாறை மீது ஏறி குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி தண்ணீரில் விழுந்துவிட்டார். தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட அவரை அங்கிருந்தவர் உடனடியாக மீட்டனர். குளித்து...
என் கணவருக்கு பிரபல நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. எனது கணவர் நடிகர் யுவராஜ் குமார், நடிகை சப்தமி கவுடாவுடன் தனியாக வசித்து வருகிறார். இருவரும் கள்ள உறவைத் தொடர்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியிருக்கிறார் நடிகர் யுவராஜ்குமாரின் மனைவி ஸ்ரீதேவி. சமீபகாலங்களாக திரையுலகினர் பலரும் விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் பேரனும், நடிகருமான யுவராஜ் குமார் (குரு ராஜ்குமார்) தனது மனைவி...
தேனி மாவட்டம் போடி அருகே குழந்தைகள் காப்பக பெண் நிர்வாகி, அங்கு தங்கியுள்ள 10 வயது மாணவனிடம் அடிக்கடி அத்துமீறியதாக புகார் எழுந்து. இதையடுத்து தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி...
பெங்களூருவில் தொண்டை வலிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் உயிரிழந்ததாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பங்கி ராமநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது தான் இந்த புகார் எழுந்துள்ளது. தொண்டையில் புண் இருந்த மைக்கேல்(7) என்ற சிறுவன் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அறுவை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் வசித்து வருபவர் 38 வயது ராமு. இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 30 வயது சரளா. இவர்களுக்கு 13 வயதில் கீர்த்தனா, 6 வயதில் மேகா என இருமகள்கள். ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ராமு குளித்துவிட்டு, துண்டை காய வைப்பதற்காக வீட்டில் மீட்டர் பெட்டி அருகில் இருந்த கொடி கம்பியில்...