Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த கணவனை காப்பாற்றும் வாய்ப்பை அவரது மனைவி இழந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரிதா (24). இவரது கணவன் நம்பி ராஜேஷ் ஓமனில் உள்ள மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்ரிதாவுக்கு அண்மையில் தகவல் வந்தது. பதறிப்போன அம்ரிதா, கணவருக்கு மருத்துவமனையில்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கொடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு, பாலாஜி இன்ஸ்டாகிராமில் கனகபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சந்தித்தார். சில நாட்களில் காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை பாலாஜி திருமணம் செய்ய விரும்பினார். பாலாஜி தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம்...
ஹூப்ளியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட்தைப் போல, இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை. இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம்...
காதலனுக்கு வாகனம் வாங்குவதற்காக வீட்டின் உரிமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்து 36 கிராம் தங்கநகையைக் கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி...
சமீபகாலமாக பல தம்பதியினரும் குழந்தை பிறக்காமல் மருத்துவமனைகளிலும், கோயில்களிலும் சிகிச்சைக்காகவும், வேண்டுதலுக்காகவும் செல்வதை பார்க்கிறோம். அதேசூழலில், சிலர் பிறந்த பச்சிளங்குழந்தையை பரிதாபமாக பெற்றோர்கள் கைவிடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. பூமியில் இருக்கும் பல லட்ச உயிர்களுக்கு, இயற்கையாக இருக்கக்கூடிய உணர்வு தாய்மை உணர்வு. எந்த உயிரினமாக இருந்தாலும் தனது குழந்தைகளை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி விட வேண்டும் என அந்த உயிரினங்கள் நினைக்கும். அது ஆடாக இருந்தாலும் சரி, மாடாக...
நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகர் (24) கூலி வேலை செய்யும் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த புனிதா (18) என்ற பெண்ணை காதலித்து, குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக...
ஆப்பிரிக்க நாடு ஒன்றின் உள் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் நீண்ட 16 ஆண்டுகளாக உண்ணவோ துளி நீர் கூட பருகவோ செய்தது இல்லை என கூறி வருகிறார். திடீரென்று ஒருநாள் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்தவர் Muluwork Ambaw. இவருக்கு 10 வயதாக இருக்கும் போது திடீரென்று ஒருநாள் சாப்பிடுவதையும் தண்ணீர் பருகுவதையும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். கடைசியாக தாம் சாப்பிட்டது சிவப்பு பருப்பில் செய்த உணவு என்றும் அவர் நினைவு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 32). ஓசூரில் கட்டடத் மேஸ்த்திரியாக உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன்(35) என்பவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதும், ஒன்றாக மது அருந்துவதுமாக இருந்துள்ளனர். இதற்கிடையே காளிதாஸ் மனைவி...
சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா (12). இவர், எம்.கே.பி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஜெகநாதனுக்கு மணலியில் சொந்த வீட்டு மனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜெகநாதன் 40 லட்ச...
கன்னியாகுமரி நாகர்கோவிலில் லாட்ஜில் பள்ளி மாணவியை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறைகள் வழங்கிய லாட்ஜ் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள விடுதி ஒன்றில் இளம் ஜோடி சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று தேடினர். 3 அறைகளில் இருந்து இளம்...