Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லையான கொடைரோடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுரை ரோந்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவில் சந்தேகத்திற்குரிய வகையில் ரோட்டோரத்தில் நின்றிருந்த காரை சோதனையிட்டனர். அந்த காரில் பெண் சடலம் இருந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வருவதால், கார், சடலத்தை மீட்டு காரில் வந்த 2 இளைஞர்களையும் அம்மையநாயக்கனூர் போலீஸாரிடம் ஒப்படைத்துச் சென்றனர். இதையடுத்து அம்மையநாயக்கனூர்...
திருமண நிகழ்விற்கு வந்தவர்கள் வீட்டின் வாசலில் உள்ள முட்டு சந்து சாலையில் படுத்திருந்த நிலையில், வடமாநில பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி சாலையில் வேகமாக சென்ற போது சென்னையில் உறவினர் திருமணத்திற்கு வந்தவர்கள், வீட்டில் இடப்பற்றாக்குறை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டின் வாசலில் படுத்திருந்த பெண்கள் மீது வடமாநில பெண் சொகுசு காரை கொண்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர் 10-வது தெருவில்...
நான்கு ஆண்டுகளாக காதலித்த பெண்ணை சாதியைக் காட்டி காதலன் திருமணம் செய்ய மறுத்ததார். இதனால் அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் உள்ள காந்தி நகரைச்ச் சேர்ந்தவர் கிரண். கலபுர்கி புறநகர் பகுதியில் உள்ள யாலாலிங் காலனியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில் கிரணும், புஷ்பாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....
வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட திருநங்கையை கொடூரமாக கொலை செய்த தோழியை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள முருகேஷ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மே 3-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஜீவன் பீமா நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், துர்நாற்றம் வீசிய வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் திருநங்கையின்...
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பெண் சாம்பா தேவி. அவளுடைய முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவது கணவர் பீகார் மாநிலத்தில் வசிக்கிறார். அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. சாம்பாதேவிக்கு ஜோதி என்ற 19 வயது மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மகள் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் அவரது கணவரும்...
தென்காசி அருகே மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சுரண்டை அருகே குலையநேரி பகுதியைச் சேர்ந்த முருகன். இவரது மகன் சிவசக்தி (14). இந்த நிலையில் நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது....
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை வீடு புகுந்து வாலிபர் கழுத்தைத் துண்டித்துப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவிற்குட்பட்ட சோம்வார்பேட்டையில் உள்ள சுர்லாபி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, முத்தாக்கியின் ஒரே மகள் மீனா(14). இவர் சூர்லப்பிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மட்டும் படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்குப்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளர். இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் கார்த்திகாமணி தனது கணவர் சரவணனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். சரவணன், செல்வி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவியை வெளியூர் பகுதியில் வைத்துவிட்டு, இரண்டாவது மனைவி செல்வியை அதே வீட்டில் பெரிய...
இளைஞரிடம் நூதன முறையில் பணத்தை பெற்று ஏமாற்றிய பெண் உள்பட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாகவே வடமாநில கும்பல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திட்டம் போட்டு சதித்திட்டம் தீட்டி கொலை, கொள்ளை மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் நடந்த...
2 வருடமாக ஒன்றாக பழகிய காதலன் திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச்...