Wednesday, May 15, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
346 POSTS 0 COMMENTS
காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள். ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து வந்த சந்தோஷம், திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே இல்லை என்கிறார்கள். தொடர்ந்து கணவன், மனைவிக்குள் சண்டை நீடித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட...
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்த காரும் முருகனின் காரும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா, இவர்களது மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே...
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனையடுத்து ஆஸ்துமாவாக இருக்கலாம் எனக் கருதி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு...
40 வயது கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 21 வயது மகளை கண்டித்த தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு...
கோவையின் வெவ்வேறு கல்லூரிகளில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே தனுஷ் நேற்று சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், கழிவறைக்குச் சென்ற தனுஷ் அங்கு தவறுதலாக வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கீழே விழுந்த...
டிரெண்டிங் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அதிகரித்து வரும் தாய் - மகன் உறவை கொச்சைப்படுத்தும் வீடியோக்கள் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடும் கவலை எழுப்பி வந்ததன் மத்தியில், தற்போது இன்ஸ்டாகிராமுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சேலஞ்ச், டிரெண்டிங் உள்ளிட்ட பெயர்களில், அவ்வப்போது விநோதமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதுண்டு. அவற்றில் பலதும் அநாகரீக மற்றும் அபத்தமானவை. அதில் ஒன்றாக அம்மா - மகன் பாசத்தை காட்டும்...
கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார். இந்த...
மீஞ்சூர் பகுதியில் பழிக்குப் பழியாக தலை, கைகள் துண்டித்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை துணியால் சுற்றப்பட்ட நிலையில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத...
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சிறுமி ரிம்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தனது சகோதரியின் 'ஹல்டி விழாவில்' (திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு) நடனமாடிக்கொண்டிருந்தார். சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ, ரிம்ஷா தனது குடும்ப உறுப்பினர்களுடன் இசையுடன் நடனமாட முயற்சிப்பதைக் காட்டுகிறது. ஆனால், சில வினாடிகளுக்குப்...
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பிச்சநந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (40), பவித்ரா (30). இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், கோடை விடுமுறைக்கு குழந்தைகள் வீட்டில் இருந்ததால், பவித்ரா தனது குழந்தைகளை தினமும் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பவித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில்...