Tuesday, February 17, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
முடி உதிர்வு...... தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும். நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். நெல்லி...
ரியோ… ரேகா Evict ஆன நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்துள்ளர்கள். எதிர்பார்த்ததுபோல் ரியோவும் சுரேஷை தான் நாமினேட் செய்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் சுரேஷ் மற்றும் ரியோ இடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. அதில் ரியோ “கடவுளுக்கு வேற வேலையே இல்லையா” என்பது போல் சுரேஷை கேட்கிறார். வழக்கம்போல் இந்த Promo பார்த்து நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள். #Day15...
முகக்கவசம்........... மேற்கு வங்க மாநிலத்தில் உணவருந்தும் கடையில் இலவசமாக கொரோனா முன்னெச்சரிக்கைக்காக ஜிப் முகக்கவசம் அளிக்கப்பட்டு வருவது பரபரப்பாக பேச்சுப் பொருளாக இருந்தது. மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இயங்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவருந்த வரும் வாடிக்கையாளருக்கு ஜிப் வைத்த முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதுவகை முகக்கவசம் வாடிக்கையாளரின் நலன் கருதி சாப்பிடும் போதும் முகக்கவசம் அணிந்திருக்குமாறு வாய் பகுதியில் மட்டும் ஜிப் வைத்து தைக்கப்பட்டுள்ளது என அந்த ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர்...
பிக்பாஸ்… முதல் Elimination ஆக நடிகை ரேகா Big Boss வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். பார்வையாளர்கள் தவிர போட்டியாளர்கள் பலரும் ரேகாவுக்காக அழுதார்கள். அதுக்கு Nominate செய்யாம இருந்து இருக்கணும் என்பது நெட்டிசன்களின் குரல். இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்கிறார்கள். வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். ஆரி எப்போதும் அட்வைஸ் செய்வதும், #Day15 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும்...
பாரதிராஜா வேண்டுகோள்… சினிமா திரையுலகம் மீண்டெழுவதற்காக ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் 30 சதவீத ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான பாரதி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அ ஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பா...
கொரோனா.......... கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாகி, மீண்டும் கொரோனா உடல்நிலையை மோசமடைய வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் Dmitriy Stuzhuk. இவர், பிரபல பிட்னெஸ் மாடல். அண்மையில் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு தனது தாய் நாடான உக்ரைனுக்கு திரும்பினார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி...
அவுஸ்திரேலியா............ அவுஸ்திரேலியாவில் மீனவர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டுள்ளார். திடீரென தூண்டிலை ஏதோ இழுக்க, இழுத்த வேகத்தைப் பார்த்து பெரிய மீன் ஒன்று சிக்கியிருக்கலாம் என்று எண்ணி தூண்டிலை கஷ்டப்பட்டு இழுத்த Trent de With தூண்டிலின் முனையில் சிக்கியிருந்த விலங்கைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தார். அந்த தூண்டிலில் சிக்கியிருந்தது ஒரு பெரிய முதலை! இவர் தூண்டிலை இழுக்க, முதலை இவரை இழுக்க, கடைசியாக ஒரு வழியாக தூண்டில் விடுபட,...
அயர்லாந்தின்....... சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அயர்லாந்தின் வடக்கு பகுதியில் முககவசம் இல்லாமல் விமானத்தில் பயணிக்க முயன்ற போது சக பயணிகளால் விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக பெண் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட்லிருந்து எடின்பர்க்குக்கு புறப்பட இருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் முககவசம் அணியாமல் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் முககசவம் அணி மறுத்துள்ளார். இந்நிலையில்...
ஜனாதிபதி டிரம்..... ஜனாதிபதி டிரம்புடன் உடனையே பேச வேண்டும் என கோரிக்கை வைத்து, இளைஞர் ஒருவர் டிரம்ப் டவரில் 13 மணி நேரம் தொங்கிய சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. கறுப்பின ஆதரவு இயக்கத்தை சேர்ந்தவர் என கூறும் அந்த இளைஞரை சுமார் 13 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிகாகொ நகரில் அமைந்துள்ள டிரம்ப் டவர் எனப்படும் கட்டிடத்தின் 16-வது மாடியில் இருந்தே அவர் தொங்கிய...
இந்தியா.......... இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தற்கொலை செய்த சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் நாசிக் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அஸ்கர் அலி, சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அஸ்கர் அலி வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கடிதம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அக்கடிதத்தில், சிறைகாவலர்கள் துன்புறுத்தி வந்ததால்...