Tuesday, February 17, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
உணவு.......... ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 107 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான பங்களாதேஷ், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மோசமான நிலையில் இருந்தாலும்,...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் தொழிலதிபர்களை தனியாக வரவழைத்து, அவர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் விசைத்தறி நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவருக்கு பெண் ஒருவர் போன் செய்தார். தனக்கு மொத்தமாக பெட்சீட் வேண்டும் என்றும் நேரில் வந்து ஆர்டர் எடுத்துக் கொண்டு அட்வான்ஸ் வாங்கிச் செல்லுங்கள் என்று போனில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் கூறிய முகவரிக்கு தொழிலதிபர், தன்னுடைய...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விருத்தி ஏற்படும். எதிர்பார்த்த அளவிற்கு லாபமும் இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நண்பர்களுடன் சிறு சிறு மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெற்றோர் மற்றும் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய பழைய நினைவுகளை அசை போட்டு பார்ப்பீர்கள். வாகன ரீதியான...
பிரித்தானியா......... பிரித்தானியாவில் அடுத்து ஆண்டு துவக்கத்தில் கார் ஓட்டும்போது மொபைலைத் தொட்டாலே 200 பவுண்டுகள் அபராதம் என்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது. தற்போது, வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது மொபைலை கையில் வைத்து பேசினாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டம் உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு துவக்கம் முதல், மொபைலைத் தொட்டாலே அபராதம், அது பேசுவதற்கானாலும் சரி, குறுஞ்செய்தி அனுப்புவதற்கானாலும் சரி, புகைப்படம் எடுப்பதற்கானாலும் சரி, இணையத்தில் உலாவுவதற்கானாலும் சரி, பாடல்...
பிரான்ஸ்....... பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடமேற்கு புறநகர் பகுதியில் ஒரு ஆசிரியை தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். கருத்து சுதந்திரத்தை கற்பித்தாற்காக ஆசிரியை கொலை செய்யப்பட்டார் என மேக்ரோன் கூறியுள்ளார். அவர்கள் வெல்ல மாட்டார்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சம்பவ இடத்திற்கு வந்த ஜனாதிபதி கூறினார். உள்ளூர் நேரப்படி சுமார் 5 மணிக்கு பள்ளி அருகே இந்த தாக்குதல் நிகழ்ந்தது. சம்பவம்...
முத்தையா முரளிதரன்… இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளராக பல சாதனைகளை புரிந்தவர் முத்தையா முரளிதரன். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக ‘800’ உருவாகவிருக்கிறது. இதில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இ யக்கவிருக்கிறார். ச மீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கூறி பலர் த ங்களது எ தி ர்ப்புகளை...
மாஸ்டர்… மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நொடி வரை படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது. அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு...
பிரான்ஸ்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பாரிஸ் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-செயிண்ட்-ஹானோரைனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நபர் ஒருவர் பள்ளி ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதையடுத்து அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல்தாரி சுட்டுக்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் உயிரிழக்கும் தருவாயில்...
சீனா..... எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது. லொறி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆயுதமானது, ஆளில்லா குட்டி விமானங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த குட்டி விமானங்கள் போர்முனையில் எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை தொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த கதிகலங்கவைக்கும் ஆயுதத்தை ஹெலிகொப்டர் மூலம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்...
போலி கடவுச்சீட்டுடன்......... போலி கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க வாழ் தமிழரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் வசித்து வரும் தமிழரான துரைகந்தன் முருகன் (41) என்பவர் மீது சிறுமியை வன்கொடுமைக்கு இரையாக்க முயன்றதாக நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் சென்றுள்ளார். வழக்கமான சோதனைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய...