PUBG உட்பட 118 மொபைல் செயலிக்கு இந்திய அரசு தடை!!

727

மொபைல் கேம்………….

பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மொத்தம் 118 செயலிகளை தடை செய்துள்ளதாக ANI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் 18 கோடி பேர் PUBG விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். PUBG விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையில் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு,

அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இருப்பதால் 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு அறிவித்தது நினைவுக் கூரத்தக்கது.