அன்று பரணியின் காலில் விழுந்தது எதற்கு?.. உண்மையை தற்போது உடைத்த ஜுலி..!

607

ஜுலி…

பிரபல ரிவியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான உள்ளே சென்று பிரபலமடைந்தவர் தான் ஜுலி.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலமடைந்த நிலையில், ஜுலி மட்டும் பலரால் வெறுக்கப்பட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று பிரபலமடைந்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை பலரையும் வெறுக்க வைத்தது.

இதே சீசனில் பங்குபெற்ற பரணி பிரச்சனை தாங்கமுடியாமல் வெளியேறிய போது பரணியை அண்ணன் என்று சொந்தம் கொண்டாடிய ஜூலி கூட ஒரு வார்த்தை பேசவில்லை.


ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது பரணி காலில் ஜூலி நடு ரோட்டில் விழுந்த காட்சி வைரலாகியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி, இதுகுறித்து பேசுகையில் உண்மையில் எனக்கு அவ்வளவு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

காரணம், அவர் வெளியில் சென்ன அன்று தான் ஒரு தங்கச்சியாக நடந்து கொள்ளவில்லை. தான் வெளியே சென்ற அன்று அவர் சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தது.
எனது குற்ற உணர்ச்சியை போக்க அவரது காலில் விழுந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

நான் வெளியில் வந்த பின்னர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார்.