இறந்த காதலிக்கு தாலி கட்டி மனைவியாகிய காதலன் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

3339

இலங்கை..

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் என மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது.

10 வருட காலமாக 22 வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும் மதுர்சன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29.12.2022 அன்று காதலி திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரின் கணவர் மதுர்சன் என பிரசுரித்திருந்தார்.


மேலும் இறுதிச்சடங்கில் காதலியின் உடலத்திற்கு தாலி கட்டி தனது மனைவியாக்கியிருந்தார். இவர்களின் காதல் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருந்தது.