எங்க மாமனாரும், மாமியாரும் வீட்ல இல்ல.. வந்தா கணவனின் கதையை முடிச்சிடலாம்.. நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி?

1059

சேலம்….

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (32). இவரது மனைவி நிவேதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அலறி கூச்சலிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுந்தர்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுந்தர்ராஜ் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக மருத்துவர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து சுந்தர்ராஜின் மனைவி நிவேதாவை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்த போது தினேஷ் என்ற இளைஞருடன் அதிக நேரம் பேசியதும் தெரியவந்தது.

பின்னர், இருவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், பெங்களூருவில் இருந்து சுந்தர்ராஜ் சொந்த ஊருக்கு வந்ததும் நிவேதா அங்குள்ள தனியார் பள்ளிக்கு ஆசிரியை வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி தோழி வித்யாவின் மூலமாக தினேஷ் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்து செல்போனை பிடிங்கி வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நிவேதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்நிலையில் ஆடி 1ம் தேதி மாமனார், மாமியார் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நிவேதா, 17ம் தேதி இரவு காதலன் தினேசை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், சுந்தர்ராஜுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

சுந்தர்ராஜின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நிவேதாவுக்கு உதவிய வித்யா மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.