கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் வேதனை அடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

2490

சென்னை..

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமலா(35). திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ராஜா வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ராஜா சரியாக வீட்டிற்கு வருவதில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அமலா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டில் யபரும் இல்லாத நேரத்தில் அமலா விஷம் குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்தார்.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாமியார் மாமனார் அமலாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமலா தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.