கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – பகிரங்கப்படுத்திய அமெரிக்கா!!

442

கூகுள்……..

உலகின் முன்னணி நிறுவனமான கூகுளிற்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களத்தின் 11 மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இணைய தேடல்கள் மற்றும் இணைய விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டத்தை குறித்த நிறுவனம் மீறியுள்ளதாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வழக்கை குறைபாடுடைய வழக்காக தாம் கருதுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இணையக் காவலாளியாக செயற்படுவதற்கான இடத்தை கூகுள் நிறுவனம் தக்கவைத்துக் கொள்ள கூடியதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில்,

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதன் தேடுபொறி மற்றும் உலாவிகள் என்பன பயனாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இயல்பாகவே காட்சிப்படுத்தப்படுவதற்காக பில்லியன் டொலர்கள் செலுத்துவதை நீதிபதிகள் கவனத்திற் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.