திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குளிர் பிரதேசத்தில் கணவருடன் வசித்தவருக்கு நடந்தது என்ன?

439

தமிழகத்தில்….

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள குளிர்பிரதேசமான கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் திகதி திருமணம் நடந்தது.

அஜித்குமார் கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதனால் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷோபனா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.


அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஷோபனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த ஷோபனாவின் தந்தை கோபால் அதிர்ச்சியடைந்தார், பின்னர் அவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இது தொடர்பில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.