ஆத்மிகா..

மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மிகா. மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஆத்மிகா முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார். அந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார்.

இவரின் கல்லூரி படிப்பெல்லாம் சென்னைதான். அதனால் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பார். இவரின் க்யூட்டான லுக்கால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார்.

தொடர்ச்சியாக காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் படவாய்ப்புகள் குறைவாகவே வருவதால் சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு அழகான புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் ஆத்மிகா. அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார்.

















