பள்ளி மாணவி குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த நபர்.. இறுதியில் நடந்த சோகம்!!

928

சென்னையில்..

சென்னை ஏழுகிணறு பகுதியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நேற்று காலை அவரது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக நபர் ஒருவர் எட்டிப் பார்த்து ரசித்த படியே அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் விரட்டி பிடித்து அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாநகராட்சி 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரியும் மகிமைதாஸ் (47) என்பது தெரியவந்தது.


இதனையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.