மகளிடம் அத்துமீறிய 60 வயது காதலன்… அந்தரங்க உறுப்பை அறுத்து எறிந்த காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!

743

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியைச் சேர்ந்தவர் மெஹந்தி லால். 60 வயதான இவருக்கு 45 வயதான பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை அவர் தனது ஊருக்கு அழைத்து வந்தார். ஆனால், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊருக்கு ஓரமாக ஒரு குடிசை அமைத்து தங்க வைத்தார். அந்த பெண்ணின் 19 வயது மகளும் அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி லால் காயங்களுடன் இறந்த நிலையில் காட்டுப் பகுதியில் கிடப்பதாக போலீசாருக்கு அவரது மகன் சுனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.

லால் உடலில் காயங்கள் இருந்ததோடு, அந்தரங்க உறுப்பும் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


பரிசோதனை முடிவில், விலா எலும்பு முறிந்திருந்ததும், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவுமே லால் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இதனிடையே லாலின் காதலி மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியதால் விசாரணை வளையத்தில் கொண்டுவந்தனர். லாலை கொன்றது தான் தான் என ஒப்புக்கொண்ட அந்த பெண் தங்களுக்கு நடந்த கொடுமைகளையும் வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலைசெய்யப்பட்ட மெஹந்தி லாலும், கொலையாளி பெண்ணும் பல வருடங்களாக ஒன்றாக வசித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் காதலியின் மகளை அடைய வேண்டும் என்ற ஆசை மெஹந்தி லாலுக்கு ஏற்பட்டுள்ளது.

தனது மகள் வயது உள்ளவர் என்று கூட பார்க்காத அவர், இளம்பெண்ணை இரண்டு முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். கடந்த 20ம் தேதி தூங்கும்போது லால் மீண்டும் இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார். கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத மகள், தனது அம்மாவிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் லாலை கொல்ல முடிவெடுத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி தனது வீட்டிற்கு வரவழைத்த பெண், அவருக்கு மயக்க மருந்து கலந்தை மது ஊற்றி கொடுத்தார். அதைக் குடித்தது போதையான சற்று நேரத்தில் சரிந்துள்ளார்.

மகள் உதவியுடன் அவரை கொலை செய்த பெண், மகளிடமே அத்துமீறிய ஆத்திரத்தின் அந்தரங்க உறுப்பையும் வெட்டி உடலை முட்புதர் நிறைந்த காட்டுப் பகுதியில் வீசியுள்ளார் என்று போலீசார் கூறினர். இதனையடுத்து, கொலை செய்த பெண் மற்றும் அவருக்கு உதவிய மகள் ஆகியோரை கைது செய்த போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.