இந்தியா……..

இந்தியாவில் க ணவன் கொலை செய்யப்பட்ட 1 மாதத்தில் அவர் மனைவியை குடும்பத்தாரே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் மண்ணி குமார். இவர் மனைவி லலிதா தேவி(29). குமார் ஒரு மாதத்துக்கு முன்னர் மர்ம நபர்களால் கொலை செ ய்யப்பட்டார். இதையடுத்து அவர் பெயரில் உ ள்ள காப்பீ ட்டு தொ கை ரூ 15 லட் சம் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்தது.

இந்த சூழலில் லலிதா நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சடலத்தை பொலிசார் கைப்பற் றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து லலிதாவின் சகோதரர் கூ றுகையில், லலிதாவு க்கு வரவேண்டிய காப்பீடு பண த் தை தாங்கள் அபகரித்து கொள்ள அவர் கணவர் குடும்பத்தார் திட்டம் போட்டனர்.

அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததோடு, வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் லலிதாவின் மாமியார், மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக் குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.















