மூக்கு, வாயிலிருந்து கொட்டிய ரத்தம்.. 4 வயது மாணவன் ஆசிரியர் அடித்ததில் உயிரிழப்பு!!

504

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து வருபவர் வீரேந்திரன். இவருடைய மகன் 4 வயது ஷிவாய் . இவர் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தார்.

இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக அவனது சகோதரர் சுமித் பெற்றோரிடம் கூறினான். பள்ளியில் ஒரு ஆசிரியர் ஷிவாயை வகுப்பறைக்கு அழைத்து சென்று உட்கார வைத்தார்.

ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதனால் கோபத்தில் ஆசிரியர் சிறுவனை அடித்து வெளுத்தார். இதில் சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.

இதை தொடர்ந்து சிறுவன் அழுது கொண்டே தண்ணீர் வேண்டும் என கேட்டான். ஆனால் அந்த ஆசிரியர் தண்ணீர் கொடுக்க மறுத்து விட்டார். இந்நிலையில் 10 நிமிடங்களுக்கு பிறகு குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்தது.

பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


அத்துடன் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளிலும் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காவல் துறையினர் அந்த பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் வகுப்பறையில் பிற மாணவர்களிடமும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.