இனியும் உலகம் இதை நிறுத்தாவிட்டால்.. கொரோனாவை போன்ற நோய்கள் அதிகரிக்கும்: ஐ.நா எச்சரிக்கை!!

859

விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் பரவும் ஜூனோடிக் நோய்கள் அதிகரித்து வருகின்றன, வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இல்லாததால் தொடர்ந்து அவை அதிகரிக்கும் என ஐ.நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கையின்படி, ஆனால் அந்த அதிகாரிப்பு தானாக ஏற்படவில்லை.

இது நமது இயற்கை சூழலின் சீரழிவால் ஏற்ப்படுகிறது. எடுத்துக்காட்டாக நில சீரழிவு, வனவிலங்கு சுரண்டல், வளங்களை பிரித்தெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் மூலம். இது விலங்குகளும் மனிதர்களும் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றுகிறது.

கடந்த நூற்றாண்டில் நாவல் கொரோனா வைரஸ்களின் குறைந்தது ஆறு பெரிய வெடிப்புகளைக் கண்டோம் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ்-பொதுச் செயலாளரும் நிர்வாக இயக்குநருமான இங்கர் ஆண்டர்சன் கூறினார். கடந்த இரண்டு தசாப்தங்களாக மற்றும் கொரோனாவுக்கு முன்னர், ஜூனோடிக் நோய்கள் 100 பில்லியன் டொலர் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தின.”


உள்ளூர் ஜூனோடிக் நோய்களான ஆந்த்ராக்ஸ், போவின் காசநோய் மற்றும் ரேபிஸ் போன்றவற்றால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர் என்று அவர் கூறினார். இவை பெரும்பாலும் சிக்கலான வளர்ச்சி பிரச்சினைகள், கால்நடைகளை அதிகம் சார்ந்திருத்தல் மற்றும் வனவிலங்குகளுக்கு அருகாமையில் உள்ள சமூகங்களில் ஏற்படுகிறது. உதாரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இறைச்சி உற்பத்தி 260% அதிகரித்துள்ளது என்று ஆண்டர்சன் கூறினார்.

நாம் விவசாயத்தை தீவிரப்படுத்தியுள்ளோம், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளோம் மற்றும் காடுகளை அழத்து வளங்களை பிரித்தெடுத்துள்ளோம் என்று அவர் விளக்கினார்.

அணைகள், நீர்ப்பாசனம் மற்றும் தொழிற்சாலை பண்ணைகள் மனிதர்களில் 25% தொற்று நோய்களுடன் தொடர்புள்ளன. பயணம், போக்குவரத்து மற்றும் உணவு விநியோக சங்கிலிகள் எல்லைகளையும் தூரங்களையும் அழித்துவிட்டன. காலநிலை மாற்றம் நோய்க்கிருமிகளின் பரவலுக்கு பங்களித்தது.

நிலையான நில நிர்வாகத்தை ஊக்குவித்தல், பல்லுயிர் மேம்பாடு மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் முதலீடு செய்தல் போன்ற எதிர்கால தொற்று நோய் பரவலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த அரசாங்க உத்திகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

வனவிலங்குகளை சுரண்டுவதும், நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை அழிப்பதும் நாம் தொடர்ந்து செய்தால், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த நோய்கள் தொடர்ந்து விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவும் என்று ஆண்டர்சன் கூறினார். எதிர்கால வெடிப்புகளைத் தடுக்க, நமது இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்திய ஆக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.