சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது… லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

805

சீனா உலகம் முழுக்க பல நாடுகளிடம் இராணுவ ரீதியாக அத்துமீறுவது போலவே இந்தியாவுடனும் அத்துமீறி வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்தியா சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் எல்லாம் கவனிக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா கவனித்து வருகிறது.

இதில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறிவிட்டது. அதேபோல் இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா சீனா சண்டை தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியா – சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டை விசாரித்து வருகிறது. அவர்களின் பேச்சுவார்த்தைகளை பின் தொடர்ந்து வருகிறோம்.


இரண்டு நாடுகளும் பிரச்சனையை தீர்க்க முயன்று வருவது தெரியும். எல்லை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரச்சனை மேலும் மோசமாக கூடாது என்று இந்தியாவும் – சீனாவும் விரும்புகிறது.

இதனால் லடாக் எல்லையில் விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லையில் பழைய நிலைமை திரும்ப வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் சீனாவின் செயல்களை கண்காணித்து வருகிறார். சீனா உலகம் முழுக்க அத்துமீறி வருகிறது. உலகின் பிற நாடுகளில் சீனா எப்படி அத்துமீறுகிறதோ அதே போல இந்தியாவிலும் அத்துமீறுகிறது என்று டிரம்ப் நம்புகிறார்.

இதனால் இந்தியாவிலும் சீனா அதே பேட்டர்ன் மூலம் அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. இதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.