உங்களுக்கு ஒற்றை தலைவலி இருக்கா? அப்போ அறவே இந்த உணவுகளை தொடவே தொடாதீர்கள்..!!

820

தலைவலி…

பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.

மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி , களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளினாலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதிலும் சில உணவுகள் கூட ஒற்றைத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது.


அந்தவகையில் தற்போது ஒற்றைவலியை தூண்டக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களுக்கு முக்கிய காரணியாக இருக்கின்றன. சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலியை 22 சதவிகிதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு கொண்டுள்ளது.

  •  அதிகப்படியான காஃபின் உட்கொள்வது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். சாக்லேட், காபி, டீயில் அதிக அளவு காஃபின் உள்ளது.

  •  ஒற்றைத் தலைவலி கொண்டவர்களில் சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ஒற்றை தலைவலியின் தூண்டுதலுக்கும் சீஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.

  • பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை இனிப்புகள் நிரம்பியுள்ளன. இது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். எனவே இனி செயற்கை இனிப்பை தவிர்த்துவிடுங்கள்.

  •  MSG என்பது குளுட்டமிக் அமிலத்தின் சோடியம் உப்பு. இது சில உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது கடுமையான ஒற்றைத் தலைவலியை தூண்டலாம்.

  • நிறம் மற்றும் சுவையைப் பாதுகாக்கும் நைட்ரேட்டுகள் இறைச்சிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டெலி மீட், ஹாம், ஹாட் டாக், சாசேஜ் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் நைட்ரிக் ஆக்சைடை இரத்தத்தில் வெளியிடுகின்றன, இது மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும்.

  • புளித்த உணவுகளும் ஒற்றைத் தலைவலியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது பன்னீர் , சோயா சாஸ் போன்றவை கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.