உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். காதலியை அம்மாவை தகாத உறவுக்கு அழைத்த காதலன்!!

123857

வேலூர்….

கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன் மூலம் கூறியுள்ளான்.

மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படி மாணவியிடம் கூறி உள்ளான். அதன் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி அவன் தங்கிருந்த அறைக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது கோகுல் தான் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டி உள்ளான்.


இதனைத் தொடர்ந்து கோகுல் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இருவரும் உல்லாசமாக இருந்ததை கோகுல் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தான்.

இந்நிலையில் கோகுல் மாணவி இடையேயான காதல் விவகாரம், மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் கோகுல், மாணவியின் தாயிடம் இணையதளத்தில் படங்களை பகிராமல் இருக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், என்னுடன் நீங்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் கோகுல் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.