கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்.. பதறிய மருத்துவர்கள்!!

83

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சித்ரா (35). இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது. வலி தாங்க முடியாமல் சித்ரா அலறியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

பின்னர் அவர்கள் சித்ராவை கடித்த பாம்பை தேடினர். புதருக்குள் இருந்த பாம்பை கண்டுபிடித்து பிடித்தனர். இதையடுத்து சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்து சென்றனர்.

இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.