கள்ள காதலனுடன் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்த மனைவி : கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

167778

ஆந்திரபிரதேசம்..

ஆந்திரபிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ளது தகராபு வலசை என்ற ஊர். இங்குள்ள எம்பிடி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பைடி ராஜு என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. ஜோதியின் கணவர் பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், சுரு ராஜு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.இதற்கென தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.


வெளியூரில் வேலை இருப்பதாக கூறி அடிக்கடி கள்ளக்காதலனுடன் சந்தித்துள்ளார் ஜோதி. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் ஜோதியின் கணவர் பைடி ராஜுக்கு தெரியவர, இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட, கணவரை கொல்ல ஏற்பாடு செய்தார் மனைவி ஜோதி. கள்ள காதலனுடன் போட்ட திட்டத்தின்படி உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடைய வைத்திருக்கிறார்கள்.

பிறகு கழுத்தை நெரித்து கொன்று, நாடகமாடியுள்ளனர். உடலை பின்பு யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டனர். யாருக்கும் தன்மேல் சந்தேகம் வராமல் இருக்க கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜோதி. பிறகு இதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலனையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.