நடு வீதியில் கணவன் மனைவி இருவரும் உடல் நசுங்கி பலியான சோகம்!!

100

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் வசித்து வருபவர் சுமை தூக்கும் தொழிலாளி முனியப்பன் . 36 வயதான இவருடைய மனைவி வாசலா . இருவரும் வீட்டுக்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை கடந்து அந்தப்பக்கமாக செல்ல முயற்சித்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் மோதியது.

இந்த விபத்தில், கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் இந்த விபத்து குறித்து செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் தெரிவித்தும் வெகுநேரமாக காவல்துறையினர் வராததால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.

அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.