பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை. குழந்தை திருமணத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நெகிழ்ச்சி!!

43

ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து அனைத்து தடைகளையும் தாண்டி கல்வியை தொடர்ந்த சிறுமி தற்போது 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் நிர்மலா. வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட இவரது குடும்பத்தில் 3 சிறுமிகள் ஏற்கனவே திருமணமானவர்கள்.

எனவே, நிர்மலாவையும் திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். ஆனால், நிர்மலாவோ படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளதால், இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

எனவே, கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளூர் ஒய்எஸ்ஆர்சிபி சட்டமன்ற உறுப்பினர் ஒய் சாய்பிரசாத் ரெட்டியை அணுகி தனது நிலையைத் தெரிவித்து, தான் படிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் இது குறித்து எம்எல்ஏ மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கவே நிர்மலா திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.


பின்னர், நிர்மலா அஸ்பரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் சேர்க்கப்பட்டு உயர்கல்வி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதில் நிர்மலா 440க்கு 421 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகியுள்ளார். மேலும், 2023ம் ஆண்டு வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை திருமணத்தை ஒழிக்க பாடுபடுவேன். மேலும் என்னை போன்ற பெண்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதே எனது கனவு” என்றார்.

ஏழ்மையை ஒரு பொருட்டாக மதிக்காமல், பல தடைகளைத் தாண்டிச் சென்று, தற்போது முதல் மதிப்பெண்கள் பெற்ற நிர்மலாவின் வாழ்க்கைக் கதை பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.