மணமேடையில் போதையில் தள்ளாடிய மாப்பிள்ளை : மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

51

திருமண விழா என்பது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் காலகாலத்துக்கும் மனதில் நிற்கிற பசுமை நினைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அது பல வருட கனவு. தங்களது திருமண நாள் குறித்து பல வருடங்களாக திட்டமிட்டு வாழ்பவர்கள்.

எந்த ஆடை அணிவது, அலங்காரம் எங்கே செய்வது முதற்கண்டு கனவுகளை சுமந்து சந்தோஷமாக வளைய வந்த மணமகளுக்கு, மாப்பிள்ளை போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்?

அப்படி மணமகனை போதையில் பார்த்த மணப்பெண், உடனடியாக தன்னுடைய திருமணத்தை நிறுத்தியுள்ளார். கேரள மாநிலம், பத்தனதிட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர். துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் திருமண மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த மணமகள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும், குடிபோதையில் இருந்த மணமகன், பாதிரியார் மற்றும் மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மணப்பெண், திருமணம் செய்து கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் இவர்களின் திருமணம் பாதியில் நின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், மணப்பெண்ணின் வீட்டார், ‘இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், திருமணத்திற்கு அதிக பணம் செலவழித்துள்ளதால், அந்த தொகையை இழப்பீடாக திருப்பி தர வேண்டும். இல்லையெனில், மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்காக மணமகள் வீட்டார் செலவழித்த ரூ.6 லட்சத்தை இழப்பீடாகத் தர மணமகன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே குடிபோதையில் அனைவரிடமும் தகராறு செய்த மணமகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.