இந்த நீரை தலைக்கு தேய்த்தால் ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளர்ந்துவிடும்..!

1217

அழகான கூந்தல் இருக்க வேண்டும் என ஆண், பெண் இருவரும் அதிகம் விரும்புவார்கள். பெண்களுக்கு நீண்ட அடர்த்தியான முடி என்றால் அதிகம் பிடிக்கும். அதே போன்று, ஆண்களுக்கும் அழகான மென்மையான கருமை அதிகம் கொண்ட கூந்தல் என்றால் அலாதி பிரியம்.

ஏதோ ஒரு வகையில் ஆணின் முடியை பெண்ணிற்கும், பெண்ணின் முடியை ஆணிற்கும் பிடிக்கதான் செய்கிறது. கூந்தலில் இயற்கையிலே பலவித மணங்கள் இருப்பதாக பல கவிஞர்களும் கூறுவது வழக்கமே.

முடியில் இயற்கையாக மனம் இருக்கிறதோ இல்லையோ… ஆனால் நாம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்கள்தான் அவற்றிற்கு ஒரு வித மணத்தை தருகிறது.

இதெல்லாம், ஒரு புறம் இருக்க முடியை பராமரிப்பதே ஒரு பெரிய கடமையாக உள்ளது. பலருக்கு முடி சார்ந்த கவலையே அதிகம் இருக்கும். அதிக முடி உதிர்தல், வெள்ளை முடி, பொடுகு, பேன், வழுக்கை, இளநரை இவைதான் முதன்மையான பிரச்சினையாக இருக்கிறது.


தலைமுடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணமாக மண்டையின் மீதுள்ள உறைப்பை களில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதையே முதல் காரணமாகும்.

சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி நம் தலையில் இருந்து உதிரும் என சொல்லப்படுகின்றது.

முடி உதிர்விற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் மன உளைச்சல்: போதிய தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கங்கள், மனவுளைச்சல் ஆகியவற்றால் சுரப்பிகளின் சமநிலை பாதிக்கப்படலாம்; இரத்த ஓட்டத்தில் சீர்கேடு ஏற்படலாம்.

Click here to watch this video