பேராசிரியரை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மூன்று பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

833

சென்னை….

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற பெண் மூலம் ராதா (40) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ராஜேந்திரனும் ராதாவும் நன்றாகவே பேசி வந்துள்ளனர்.

காலப்போக்கில் பேராசிரியரிடம் பணம் பார்க்க நினைத்த ராதா தான் சொந்தமாக தொழில் செய்ய போவதாகக்கூறி ராஜேந்திரனிடம் நான்கரை லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டபோது ராதா சரிவர பதில் கூறாமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.


Free Games : சின்ன சின்ன விளையட்டு- ஆன்லைனில் லைவாக விளையாடுங்கள்!
இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராதாவுக்கு நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்தது.

இதனால் புது திட்டம் தீட்டிய ராதா பேராசியருக்கு போன் செய்து, நான் உங்களை கோப ப்படுத்திவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், பணத்தை நேரில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என கூறி கொடுங்கையூரில் உள்ள ராதாவின் தோழி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

அதனை நம்பி தனியாக போன பேராசியரிடம் ராதாவும் அவரது தோழிகளும் நைசாக பேசி குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த பேராசிரியர் சில நொடிகளில் மயங்கியுள்ளார்.

அதை அடுத்து பேராசிரியரை அரை நிர்வாணமாக்கிவிட்டு அவரது பக்கத்தில் தோழியை படுக்க சொல்லி அதனை ராதா வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் அந்த வீடியோவை காட்டி, 10 லட்சம் ரூபாயை உடனே தருமாறு ராதா மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ந்துபோன பேராசிரியர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, ராதாவை பிடித்த விசாரித்த போலீசார் அவரையும், அவருக்கு உதவியாக இருந்த லட்சுமி (30), அவரது கணவர் முருகன் மற்றும் புஷ்பா (49) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது கூட்டு சதி, பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.