Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
அரக்கோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ட்ந்த தாயும், இரு பிள்ளைகளும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது போலீசாரையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் வளர்புரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஜயன் நேருஜி நகர் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இதனிடையே மனைவி மீனாட்சி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மகள் பவித்ரா...
தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக ரேணுகாசுவாமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீஸார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ரேணுகா சாமியின் ஆண் உறுப்பில் தர்ஷன் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததும், விதைப் பைகளை எரித்து சித்ரவதை செய்ததாக குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர்...
ஆந்திராவில் முன்பின் தெரியாதவர்களிடம் தோழிகள் போல் பழகி, நைசாக காஃபியில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்த தில்லாலங்கடி லேடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து 4 கொலைகள் செய்துள்ள 3 பெண்களிடமும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்பின் தெரியாத நபர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து, அவர்களிடம் நட்பை ஏற்படுத்திய பிறகு காபியில் சைனைடு கலந்து கொடுத்து கொலை...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் வைஷாலி (வயது 33). இவரது 35 வயதான கணவர் விமல்ராஜ் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள பொன்மார் பகுதியில் குடும்பத்துடன் குடியேறிய பாதிரியார் விமல்ராஜ், அதே பகுதியில் உள்ள அட்வெண்ட் தேவாலயத்தில் உதவி பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தனியார் காலணி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். சிறுவனுடன் இந்த இளம்பெண், கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அந்த சிறுவனிடம் காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இளம்பெண், சிறுவனை வீட்டில் இருந்து அழைத்துச்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரன்பட்டியைச் சேர்ந்தவர் வரதன் (80). விவசாயியான இவரது மனைவி 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன்கள் லவகிருஷ்ணன் (57), கணேசன் (47), கிருஷ்ணன். மகள்கள் மணவள்ளி(55), மங்கம்மாள்(45). இதில் கிருஷ்ணன் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் நிலம் எடுத்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். மகள் மணவள்ளி கருத்து...
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு என்கிற ஜீவா (30) டயானா (25) தம்பதி. இவர்களுக்கு இரண்டாவது பிறந்த குழந்தை பெண் என்பதால் கொன்று புதைத்துள்ளார். இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜீவா-டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி, சேர்பாடி ஊராட்சி செயலர் உமாபதி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவராஜுலு (வயது 23). கங்காராம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சிவராஜூலுவும் தனது தந்தையிடம் பாம்பு கையாளுதலைக் கற்றுக்கொண்டார். இந்நிலையில் தந்தை கங்காராம் நாகப்பாம்பை மகனிடம் கொடுத்து ரீல்களை எடுக்கச் சொன்னார். அதன்படி, சிவராஜூலு பாம்புடன் வாயில் முத்தம் கொடுத்து போஸ் கொடுத்தார். அப்போது, ​​அவரது நாக்கை பாம்பு கடித்துள்ளது. இதை...
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், டெல்லியில் துவாரகாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழக விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பாக்கத்தில் வசித்து வந்தவர் அமிர்தவர்ஷினி. அமிர்தவர்ஷினியை டெல்லியில் துவாரகாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் அவரது பெற்றோர் சேர்த்திருந்தனர். பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து, கல்லூரி சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல்...
தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார். இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த...