Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிய பின்னர் மீதமிருந்த பணத்தில் மது குடித்த தொழிலாளியை அவரது மனைவி குடத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் கடலூர் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(36). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11), வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு...
மகாராஷ்டிராவில் பால்கரில் வசித்து வருபவர் பல்லவி. 40 வயதாகும் இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிள்ளைகள் இருவரும், தன் தாயிடம் சிக்கன் உணவு வகைகளை சமைத்து தரும்படி வற்புறுத்தினர். ஆத்திரம்அடைந்த பல்லவி, சமையலறையில் இருந்த சப்பாத்தி கட்டையை எடுத்து, பிள்ளைகளை சராமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் அவரது...
ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மாவும், அவரது சகோதரரும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீர் ஷர்மா, குடும்பத்தினருடன் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால்...
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர். திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது. உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sangruram (75). மனைவியை இழந்த அவர், தனது முதல் திருமணம் மூலம் பிள்ளைகளும் இல்லாததால் தனிமையில் வாடிவந்துள்ளார். ஆகவே, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் Sangruram. ஆனால், இந்த வயதில் இனி...
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் மிதித்த நிலையில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி...
தேனி மாவட்டம், சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா என்பவரின் மகள் பிரவீனா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பிரவீனாவுக்கு போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு பிரவீனா மாசு காளையுடன் சென்று கடந்த பத்து வருடங்களாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது...
ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த குழந்தை பிறந்ததால், குழந்தையை தாய் காட்டில் கைவிட்டதாக தெரியவந்துள்ளது. சமூக அவமானத்துக்கு பயந்து குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை...
உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில், மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் சோன்கர் தனது மனைவி சாரிகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது வலது...
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள். அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் அருள் பாண்டி கள்ளத்தொடர்பை விடவில்லை எனத்...
“என்னை ஏமாத்திட்டாரு என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருந்த ஜாய் கிரிஸில்டா, புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆவேசமாக பேசினார். முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜூம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய...