Wednesday, April 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச் சாலையில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தில் கொத்தனார் மற்றும் அவருடைய உதவியாளர் பெண் உதவியாளர் என 50க்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு என தனித்தனி செட் அமைத்து அங்கேயே குடியிருந்து வேலை செய்து வருகின்றனர். அதில் கரூர் மாவட்டம் கொசூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நாகராஜ் அவரது மனைவியான 25...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே தனது மனைவி சிமாதேவி (35) மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் என குடும்பத்தினருடன் தங்கிருந்து அதே எஸ்டேட்டில்...
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் கூட வந்ததாக தெரிகிறது. பிரசவம் பார்க்க மருத்துவமனையில் செலுத்த அவர்களிடம் பணம் எதுவுமில்லை. அவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள் . இதனால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி மேலும் அதிகமாகிக் கொண்டே...
இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் . 34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான பெனலோப் சந்திரீயுடன் வசித்து வந்தனர். இந்த குழந்தை 2023ல் டிசம்பர் 17ம் தேதி மாலையில் வீட்டிலேயே உயிரிழந்து உள்ளது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்....
ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிய பின்னர் மீதமிருந்த பணத்தில் மது குடித்த தொழிலாளியை அவரது மனைவி குடத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் கடலூர் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(36). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11), வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு...
மகாராஷ்டிராவில் பால்கரில் வசித்து வருபவர் பல்லவி. 40 வயதாகும் இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிள்ளைகள் இருவரும், தன் தாயிடம் சிக்கன் உணவு வகைகளை சமைத்து தரும்படி வற்புறுத்தினர். ஆத்திரம்அடைந்த பல்லவி, சமையலறையில் இருந்த சப்பாத்தி கட்டையை எடுத்து, பிள்ளைகளை சராமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் அவரது...
ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மாவும், அவரது சகோதரரும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீர் ஷர்மா, குடும்பத்தினருடன் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால்...
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர். திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது. உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sangruram (75). மனைவியை இழந்த அவர், தனது முதல் திருமணம் மூலம் பிள்ளைகளும் இல்லாததால் தனிமையில் வாடிவந்துள்ளார். ஆகவே, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் Sangruram. ஆனால், இந்த வயதில் இனி...
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் மிதித்த நிலையில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி...