Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உண்டியலில் திருட முயன்ற போது, கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலிலே இருந்துள்ளார். கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகை, பணம் ஆகியவற்றை, உண்டியலை உடைத்து திருடர்கள் திருடி செல்வது நடந்து வந்தது. தற்போது பெரும்பாலான கோவில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உண்டியல் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமராக்கள் இல்லாத சிறிய கோவில்களில் அவ்வப்போது உண்டியல் நடைபெறுகிறது. அதே போல், தர்மபுரியில் உள்ள கோவில் ஒன்றில், உண்டியலில் இருந்த...
கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசுன்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாய்ராபானு. இவர், பள்ளிக்கூடம் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர். சாய்ராபானுவுக்கும் ஒரு இளைஞருக்கும் மே 8ம் தேதி திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கான வேலைகளில் சாய்ராபானுவின் பெற்றோர் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் திருமணத்திற்கு...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி 3 நாட்களே ஆன இளம் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தார். தேனிலவைக் கொண்டாடுவதற்காக வந்திருந்த இந்த புதுமணத் தம்பதியின் கனவுகள் நசுக்கப்பட்டன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், நேற்று திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆயுதங்களுடன் வந்த கும்பல், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு...
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் வயது 35, இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி திவ்யா வயது 27. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டின் அருகே இருந்த குப்பையில் பாதி எரிந்த நிலையில், பிறந்த குழந்தையின் உடல் இருந்துள்ளது,...
உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் கடந்த 19ந் திகதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது அஸ்தியை காவிரி ஆற்றுக்கு உறவினர்கள் 35 பேர் சென்றனர். உறவினர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் ஈமச்சடங்கில் கலந்து கொண்டு அஸ்தியை கரைத்துள்ளனர். பின்னர் உறவினர்கள் அனைவரும் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களில்,...
இந்தியா - ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் , தொலைபேசியை பறித்த ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்த மாணவி, தொலைபேசியை திருப்பித் தராவிட்டால் அடிப்பேன் என மிரட்டி, பின்னர் செருப்பால் தாக்கியுள்ளார். இதனையடுத்து சக ஆசிரியர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இந்த செயலுக்கு கல்லூரி...
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். 33 வயதான பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரியா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த மோஹித், கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஓட்டல் அறையில் மோஹித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோவை...
அவுரையா மாவட்டத்தைத் சேர்ந்தவர் மோஹித். இவருக்கும் பிரியா யாதவ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இல்வாழ்க்கையின் தொடக்கத்தில் இருவரும் சந்தோஷமாக இருந்து உள்ளனர். அதன் பின்னர், கணவன், மனைவி இடையே பிரச்னை எழுந்தது. கடும் மன உளைச்சலில் இருப்பதை கண்டு கொண்ட மோஹித் உறவினர்கள் அவரிடம் விபரம் கேட்டுள்ளனர். தமது சொத்துகளை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு பிரியாவும், மாமியாரும் கொடுமைப்படுத்துவதை அவர்கள்...
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தர்மத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கன்னிவாடி காவல் துறையினர் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக...
தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்த 40 வயது நபர், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட வீடியோவில் தனது மனைவி தாஜ்மஹாலில் வேறொரு ஆணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 40 வயதான ஷாகீர் தனது மனைவி அஞ்சூம் மற்றும் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அவர் ஏப்ரல் 15 ஆம் தேதி மீண்டும்...