Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உள்ளங்கைக்குள் உலகம் என்றான பின்னர், கூகுள் டாக்டரை நம்பி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, மருத்துவ ஆலோசனைகளுக்கு யூ-ட்யூப்பில் வரும் நிறைய குப்பை வீடியோக்களை உண்மையென்று பலரும் நம்பி தங்கள் உயிரோடு விளையாடுகின்றனர். இந்நிலையில், தனக்குத்தானே யூ ட்யூப் வீடியோ பார்த்து அதிர வைத்திருக்கிறார் இளைஞர் ஒருவர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டம் சுன்ராக் கிராமத்தில் வசித்து வருபவர்ராஜா பாபு(32). இவருக்கு சமீப காலமாக மிகக் கடுமையான வயிற்று...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனுவின் மகன் தீபான்ஷூவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சந்தோசமாக நடந்தது. அதன்படி நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோஷமாக நடந்து முடியும் என உறவினர்கள் நினைத்தனர். இந்நிலையில், அங்கு வந்த மணமகனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வன்ஷ் வால்மீகி பரபரப்பை கிளப்பும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். திடீரென இந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை பார்த்ததும் நிகழ்ச்சியில்...
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார். இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி(Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி பயின்று வருகிறார். திவ்யா தியாகி, 100 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாடு ஒன்றிற்கு தீர்வு வழங்கியுள்ளார். 1928 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் காற்றியக்கவியலாளர் ஹெர்மன் கிளாவர்ட்(Hermann Glauert), உருவாக்கிய சிக்கலான கணித பிரச்சனைக்கு திவ்யா தற்போது...
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா? இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ் அமித் லோதா போன்றோர் இதற்கு உதாரணம். ஆனால், இந்தியாவின் மிகவும் பணக்கார ஐஏஎஸ் அதிகாரி யார்? என்றால், அந்த பட்டம் அமித் கட்டாரியாவிற்கு சொந்தமானது. இவரின் தனித்துவம் என்னவெனில், இவர் முதலில் வெறும் 1 ரூபாயை...
காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது. இவர் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார். பின்பு, சீமா...
மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார். தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, கடந்த மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத்தை, அவரது...
ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது 7 வயது பேரனை அடையாளம் தெரியாத தம்பதியிடம் ரூ.200 க்கு விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியினர் மூதாட்டியிடம், பேரனுக்கு உணவு, தங்குமிடம், படிப்பு ஆகியவை கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி அந்த மூதாட்டி சிறுவனை...
2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த பெண் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போயுள்ளார். அந்த நேரத்தில் லொறி விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த வீடியோ வெளியானது. அப்போது, உயிரிழந்த பெண்ணின் டாட்டூவை பார்த்த அவரது குடும்பத்தினர் இது லலிதா...
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்நாட்டில் கொத்தடிமையாக 20 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார். ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்ற தொழிலாளி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க இறங்கியுள்ளார். பின்னர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிய அவர், விவரம் அறியாமல் சிவகங்கைக்கு சென்றுள்ளார். கடம்பங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த மலைக்கண்ணு எனும் நபர் அப்பாராவை ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்ததையடுத்து அதே ஊரைச்...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 48 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த 13-ம் திகதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா, சோனாலி ஆகிய 3 சகோதாரிகள் காவலர்...