Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர வர்மா. இவரது மகன் பிரமோத் வர்மாவுக்கு 2009ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்குள் கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருவரும் சமாதானம் அடைந்தததால் இவ்வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இருந்த போதிலும் கணவன் - மனைவிக்குள்...
கோவை மாவட்டம் சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கணவரும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (45). இவரது மனைவி சங்கீதா (42). கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சங்கீதா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணகுமார் மலேசியாவில் வேலைப் பார்த்து வந்த நிலையில், தற்போது...
தமிழகத்தில் கோவை மாவட்டம், சிறுமுகை கூத்தாமண்டி பகுதியில் வசித்து வருபவர் 35 வயது கார்த்திக் பாபு . இவரது மகன் 5 வயது சாய் மித்திரன் . கோவை சின்ன தடாகம் எம்.ஜி.ஆர் பகுதியில் வசித்து வருபவர் 20 வயது மந்திராசலம் மகன் குகன். இவர்கள் சிறுமுகை அருகே சென்னம்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அங்கு உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தனது...
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது கலையரசன். இவருக்கு ஜனவரி 26ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான ஒரு மாதத்திற்குள் கலையரசனை அவரின் மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனால் தற்போது கலையரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக, கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் கலையரசனின் சகோதரர் சூர்யா புகார் மனு அளித்துள்ளார்....
இன்னும் எத்தனை மாணவ, மாணவிகளின் உயிரை நீட் தேர்வு காவு வாங்கும் என்று தெரியவில்லை. அரசியல் லாபத்திற்காக கட்சிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி மாணவ, மாணவிகள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். தமிழகத்தில் திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயம் காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தாராபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ்....
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20 மனைவிகளுடன் ஒரே வீட்டில் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம். அவருக்கு ஆண்களும் பெண்களுமாக 104 பிள்ளைகளும் 144 பேரன் பேத்திகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒடிட்டி சென்ட்ரலின் (Oddity Central) அறிக்கையின்படி, தான்சானியாவில்...
வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால் பெட்ரோல் ஊற்றி தாயே மகனை எரித்துக்கொன்ற சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகள் கொடுத்த புகாரின்பேரில் இறந்த வாலிபரின் தாய் கைதானார். கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (23). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கிருஷ்ணமூர்த்தியின் தாயாரான ஜெயந்தி (45) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு வேலை கிடைக்காததால்...
ராசிபுரம் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், பெயிண்டர். இவரது இளையமகன் கவின்ராஜ், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வழக்கம்போல்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே நெரலகட்டே கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயது லட்சுமணா. இவரது மனைவி 42 வயது ராதாம்மா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் ராதாம்மா நர்சாக பணிபுரிந்து வந்தார். லட்சுமணா கட்டிட தொழிலாளி ஆவார். அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் லட்சுமணா...
மதுரை மாவட்டத்தில் குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாண்டிச்செல்வி - கருப்பசாமி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி, மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், போதை பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வருவதால் கணவன் மனைவி இடையே...