Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வெர்கிளம்பி முண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 19). ஸ்ரீவித்யா குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரியில் படிக்கும் ஸ்ரீவித்யா வாரந்தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வருவது வழக்கம். பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்த கபீர் மகன் சபீர் (27). அவர் ஒரு கூலித்தொழிலாளி. கடந்த 6...
அசைவ உணவு உண்பதில் தவறு ஏதும் கிடையாது. வேட்டையாடிய சமூகத்தில் இருந்து தான் நாம் அனைவரும் வந்திருக்கிறோம். நமது உணவு முறையே இயல்பில் வேட்டையாடி உண்பதாக அமைந்திருப்பதால் அசைவ உணவு வகைகளின் மீதான ஈர்ப்பு இருப்பதும் இயல்பு தான். ஆனால், அவை ஆரோக்கியமானதாகவும், ஆயுளை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கோங்க. எல்லோர் நட்பு வட்டத்திலும் அசைவத்தை ஒரு பிடி பிடிக்கிற நண்பர், தோழின்னு ரவுண்டு கட்டி அடிக்கிற ஆள்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பூங்கா தெருவில் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனி தரப்பிலிருந்து வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரம் சமூகவலைத்தளத்தில் பரவியது. அதைப்பார்த்த பெண்கள், மாணவிகள் சம்பந்தப்பட்ட கம்பெனியை அணுகினர். அப்போது கம்பெனி தரப்பில் பேசியவர்கள், ``நீங்கள் 10,800 ரூபாயை டெபாசிட்டாக செலுத்தி, எங்கள் கம்பெனியில் உறுப்பினராக வேண்டும். நீங்கள் செலுத்தும் பணத்துக்கு உங்களுக்கு சத்துமாவு, பற்பசை, தலைக்கு தேய்க்கும் ஆயில், தேன்,...
கோவை மாவட்டத்தில் வால்பாறையை அடுத்து அமைந்துள்ளது ஊசிமலை மட்டம் எஸ்டேட். இந்தப் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் அய்னுல் அன்சாரி மற்றும் நசீரான் இவர்களின் மகள் 4 வயது அப்சார். ஏற்கனவே அப்பகுதியில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. நசீரான் அவரது மகளுடன் அப்பகுதியில் சிற்றோடை பகுதியில் உள்ள கீரை பறிக்க சென்று உள்ளனர். அதே நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை...
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 45 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தவர் செலஸ்டினா. இவருக்குவயது 35. இவர் பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே பெண் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தோல்பூரில் உள்ள பாரி சதாரின் சுமித்பூரில் இருந்து ஆட்டோ ரிக்ஷா வந்தபோது, இரு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண...
வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மதியம் ஒரு இளம்பெண் எரியும் தீயுடன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கதறியபடி சாலையில் ஓடிவந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்....
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனவேல் (40). மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் குடிபோதையில் இருக்கும்போதெல்லாம் சாப்பிடாமல் படுத்துக்கொள்வார். அதைப்போல கடந்த 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் குடித்துவிட்டு தன் வீட்டில் படுத்துக்கொண்டவரை மறுநாள் காலை அவரது மனைவி அருள்மொழி (33) எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்துபோன தனவேலின் தம்பி கருப்பன்...
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தியில் பழனிச்சாமி என்பவர் மகன் சுரேஷ் கண்ணன் அப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாக ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சர்மிளா தேவி என்ற மனைவி உள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சில பிரச்சினை காரணமாக மனைவி தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். அதனை தொடர்ந்து பெரும் மன அழுத்தத்தில் இருந்து வந்த சுரேஷ் கண்ணனை நேற்று மதியத்தில் இருந்து காணவில்லை...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் வசித்து வருபவர் பிரபலமான தொழிலதிபர். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சினை இருந்து வந்தது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் முன்னேற்றம் எதுவும் இல்லை. இதனால் மருத்துவர்கள் உணவில் எதாவது பிரச்சினை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதனை ஆராயும் வகையில் செல்போனில் கேமராவை ஆன் செய்து...