Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சமூகவலைத்தளங்களில் மூன்று கண்ணுடன் இருக்கும் குழந்தையின் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் வித்தியாசமான வீடியோ பகிரப்பட்டால், அது உடனடியாக வைரலாகிவிடுகிறது. அந்த வீடியோ உண்மை தானா? என்பதை எல்லாம் பலர் பார்ப்பதில்லை, அதில் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே பின்பற்றி பகிர்ந்து விடுகின்றனர். அப்படி ஒரு வீடியோ தான் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
வருகிற செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தொடரும் அத்துடன் அத்துடன் அடுத்த மாதம் நியூசிலாந்து ‘ஏ’ அணியின் இந்திய வருகையும் திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் நாளை நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய...
தமிழகத்தில் 8 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு பாலத்தின் அடியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த வடலிவிளை இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் தண்ணீர் பிடிக்கும் வெற்று டிரம்மில் 8 வயது சிறுமி உடலில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,...
இந்தியாவில் கணவனே, மனைவியை எரித்து கொன்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின், Basanti-யில் உள்ள Palbari கிராமத்தில் வசிக்கும், Tanushree என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Dudhkumar என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். Dudhkumar நர்சிங் ஹோம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகள் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுள்ளது....
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து கஷ்டப்பட்ட இளைஞருக்கு பிரித்தானியாவில் நடந்த gaming contestல் லம்போர்கினி கார் பரிசாக விழுந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ஷிபு பவுல், இங்கிலாந்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனாவால் வேலை பறிபோனது. இவரது மனைவி Lynette, மருத்துவ தாதியாக பணியாற்றிவரும் இவர் பொழுதுபோக்காக ஓன்லைன் கேம் விளையாடியுள்ளார். 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட Best of the Best என்ற நிறுவனத்தின் ஓன்லைன் கேமிலேயே இவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. முதலில் இரண்டு...
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டிடி,...
தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் சடலமாக கிடந்ததால் கொரோனா பயத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் பெண் கவிதா(வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் வேலை செய்து வந்த கவிதா, கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது, திருமணமாகி விவாகரத்தானவர் என்பதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மத்தூர் பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி...
லவ் ஸ்டோரி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சாய் பல்லவி நடனம் அமைக்க உள்ளார். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சாய் பல்லவி. தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா படத்தில் நாயகியாக நடித்திருந்த இவர் தற்போது அதே இயக்குநர் உடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்ட...
சமூக ஊடகங்களில் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து ஈரானிய அதிகாரிகள் மூன்று இளைஞர்களின் மரணதண்டனையை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஈரான் உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, மரண தண்டனையை நிறுத்து என பொருள்படும் உள்ளூர் மொழி வாசகம் சமூக ஊடகங்களில் சுமார் 7.5 மில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கான ஈரான் அரசாங்கத்தின் முடிவால் தூண்டப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்த, வெறும் 20...
இன்றைக்கு ஆங்காங்கே பீட்ஸா கடைகள் முளைத்துள்ளன. இதை போகிற போக்கில் சாப்பிட்டு விட்டு போகின்றனர் இளைய தலைமுறையினர். ஊடரடங்கில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வனிதா அவரின் மகளுடன் பீட்ஸா செய்து அசத்தியுள்ளார். இதனை அவரின் யூட்டிப்பில் பதிவேற்றியுள்ளார். அவரை சுற்றி என்னதான் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் தூசி தட்டி விட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார். அது மாத்திரம் இல்லை, தற்போது அவருக்கு யூட்டிப்பில்...