போதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட கணவன்.. ஆவேசத்தில் மனைவி செய்த கொடூர செயல்!!

347

தேனியில்..

தேனி மாவட்டம் கடலைமலைகுண்டு மாளிகைப்பாறை பகுதியில் ராஜா – ஜெயா தம்பதி வசித்து வந்தனர். ராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி இரவு வழக்கம் போல் குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில் ராஜா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நாள் தோறும் இதே நிலை தான் என ஆவேசமடைந்த ஜெயா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவனை தலையில் வெட்டியுள்ளார்.

இதனால் அலறியப்படி ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா மயங்கினார். இதன் பின் வீட்டை விட்டு வெளியே வந்த ஜெயா, ஆட்டோவை அழைத்து வந்து அதில் மயங்கி கிடந்த ராஜாவை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் ராஜாவை சோதித்த போது அவர் இறந்து போனது தெரிய வந்துள்ளது.


இதையடுத்து ராஜாவின் உடலை மீண்டும் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். ராஜா அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து ஆட்டோ ஓட்டுநரான உறவினர் தருண் கோபி, தனது பாட்டியும், ராஜாவின் தாயுமான அன்னத்தாயிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீசா, வீட்டில் இருந்த ராஜாவின் உடலை கைப்பற்றியதுடன், கொலை செய்த ஜெயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.