மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி!!

63

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், பிரம்மவார் தாலுக்காவில் ஹோசலா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (21), பிரசாந்த் பூஜாரி (30) ஆகியோர் நேற்று மீன் பிடிக்க சென்றனர்.

இருவரும் நாகரமாதாவில் உள்ள சீதா ஆற்றில் வலை வைத்து மீன் பிடிக்க முயன்றனர். ஆற்றில் மீன்களுக்கு வலை விரித்தபோது, ஸ்ரீஷா, பிரசாந்த் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து இரு இளைஞர்களையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீர் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், நீச்சல் நிபுணர் ஈஸ்வர் மால்பே மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி இறந்த இளைஞரின் உடலை தேடினர்.


ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஸ்ரீஷா மற்றும் பிரசாந்த் பூஜாரியின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பிரம்மாவூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.