82 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. சிறுவன் அரங்கேற்றிய கொடூரம்!!

332

சென்னையில்..

சென்னை அடுத்த எண்ணூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்துள்ளார். ஆதரவற்ற இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் மக்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி இரவு எண்ணூரிலுள்ள ஒரு கடை வாசல் முன்பாக மூதாட்டி படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரம் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் அசந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தர தரவென சாலையில் இழுத்துச் சென்றார். பின்னர், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இந்த கோர சம்பவத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவை அனைத்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது.

மூதாட்டி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுதொடர்பாக சந்தேகம் எழுப்பி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த எண்ணூர் காவல் துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதான சிறுவனை காவல் துறையினர் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், மூதாட்டியை சிறுவன் தான் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அத்துடன், பாலியல் வன்கொடுமைக்குப் பிறகுதான் மூதாட்டி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தகவலும் உறுதிப்படுத்தியது. இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.