குடும்பம் தான் முக்கியம்! மிகப்பெரிய வாய்ப்பை உதறி தள்ளிய இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ராகுல் டிராவிட்!!

899

இந்திய அணிப் பயிற்சியாளராகச் செயல்பட்டால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது என்பதால் அந்த பொறுப்பை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ளே இந்திய அணிப் பயிற்சியாளர் பதவியை கடந்த 2017 இல் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் திராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பயிற்சியாளர் பதவியை ஏற்க டிராவிட் மறுத்துவிட்டதாக வினோத் ராய் கூறியுள்ளார்.

தனியார் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிசிசிஐ தலைவர் வினோத் ராய், ராகுல் எங்களிடம் வெளிப்படையாக பேசினார். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்திய அணிப் பயிற்சியாளராகச் செயல்பட்டால், குடும்பத்தினருடனும், இரண்டு மகன்களுடனும் நேரம் செலவிட இயலாத நிலை ஏற்படும்.


நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன் என கூறினார். ராகுலின் பக்கம் நின்று யோசித்துப் பார்த்தபோது அவரின் கருத்தில் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. அவர் மனதில் என்ன இருந்ததோ அதைக் கூறினார். அவர் கூறியதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்

ராகுலிடம் தொடர்ந்து பேசினோம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளம் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இளம் வீரர்களிடம் நெருக்கமாகப் பழகிச் சிறப்பாக வழிநடத்துகிறார். அணியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பல வழியில் திட்டமிட்டுச் செயல்படுகிறார் என கூறியுள்ளார்.