Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
மகா கும்பமேளாவில் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து 2 சாமியார்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில், பஞ்சதஷனம் ஆவஹன் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் அருண் கிரி என்ற சாமியாரும் கலந்து கொண்டுள்ளார். இவர், ரத்தின...
தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் நெதர்லாந்து காதலரை திருமணம் செய்தது இணையத்தில் வைரலானது. கோயம்புத்தூர் மாவட்டம் சாமநாயக்கன்பாளையம் ஊரைச் சேர்ந்தவர் பிரேமலதா. நெதர்லாந்தின் நிஜ்வேர்டால் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். அப்போது ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்ற இளைஞரின் அறிமுக பிரேமலதாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாக பழகியுள்ளனர். பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறி 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரேமலதாவும், ரமோனும் திருமணம்...
தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். தமிழக மாவட்டமான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். அந்தவகையில், நேற்று விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இவர் துபாயில் ஹொட்டல் தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர், கோயிலுக்கு...
பெண் ஒருவர் வளர்ப்பு நாயின் பிறந்த நாளுக்கு ரூ.5 லட்சம் செலவு செய்து பிரம்மாண்டமாக விழா நடத்தியுள்ளார். ரூ.5 லட்சம் செலவு இந்திய மாநிலமான ஜார்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்லப்பிராணியின் மீதான அன்பின் காரணமாக, தனது நாயின் பிறந்தநாளை ஆடம்பரத்துடன் கொண்டாடினார். இந்த நிகழ்விற்காக ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ஜம்சத்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சப்னா சோனா என்ற பெண் தனது வளர்ப்பு நாயின் 4-வது பிறந்த...
தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சேலத்தில் உள்ள கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு கபடி பயிற்சியின்போது சந்துருவிற்கு மார்பில் படுகாயம் ஏற்பட்டது. அதனை சரி செய்ய சந்துரு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காயம்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 2017ம் ஆண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. இதனையடுத்து 2022ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையில் சென்று முறையிட்டபோது அவர்கள் மறுத்ததுடன், போலி ஆவணம் ஒன்றை கொடுத்து அவரது 2 சிறுநீரகங்களும்...
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நிலையில், தாயும் அவரது குழந்தையும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம், வாய்க்கால்ப்பட்டறையில் வசித்து வந்த தச்சுத் தொழிலாளிகளான தமிழ்செல்வன் மற்றும் ஜோதி தம்பதியினர், ஏற்கனவே ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 4வது முறையாக கர்ப்பமாக உள்ள ஜோதி, சமீபத்தில் தனது தாயின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஜோதி தாயானதை அவரது கணவர் தமிழ்செல்வன் 7 மாதங்களுக்குப்...
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரித்திக் (வயது 23). ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் தனது வீட்டில் துப்பட்டாவை பயன்படுத்தி மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ​​எதிர்பாராத விதமாக துப்பட்டா ரித்திக்கின் கழுத்தை இறுக்கியது. இதனால், அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் மற்றும்...
திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டியில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவரது மகன் திலக் பிரசன்னா. இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர். இந்நிலையில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது தடையை மீறி அவர் கடலில் இறங்கி குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென அலையில் சிக்கிக் கொண்ட சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பெற்றோர் கண்முன்னே சிறுவன் அடித்து செல்லப்பட்ட நிலையில் பெற்றோர்களும் அங்கிருந்தவர்களும் அலறித் துடித்தனர். இது குறித்த காட்சிகள்...
கேரள மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவரை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஷரோன் ராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷரோன் ராஜை சமாதானப்படுத்திய கிரீஷ்மா, கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக்...