Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
பெண் காவலரின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் - முருகம்மாள் தம்பதிகளின் மகள் சுகன்யா (27) என்பவர் செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் செங்கம் அடுத்த கொட்டாவூர், கொ-அண்ணாநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி - லலிதா தம்பதிகளின் மகன் விஜய் (28) ஆகியோருக்கு கடந்த 23/04/2024 அன்று திருமணம் நடைபெற்றது.
செங்கம் டவுன் திருவள்ளூர் நகரில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து...
தேனி அருகே நடந்த கார் - சுற்றுலா வேன் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் இன்று அதிகாலை தேனி நோக்கி கேரளத்தைச் சேர்ந்த கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
எதிரே தேனியில் இருந்து ஏற்காடுக்கு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் காரில் இருந்த கேரளமா நிலம் கோட்டயத்தைச்...
கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேசுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார்.
அப்போது ரேணுகா, நான் உன்னை விட்டு செல்ல வேண்டுமானால் ரூ.20 லட்சம்...
சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி ராம் கலா (39). இவர்களுக்கு கோகுல் (11) என்ற மகனும், பவித்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.
பாலாஜி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜியும், அவரது மனைவியும் கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
பாலாஜியின் மனைவி பவளமலைப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பாலாஜி சென்னையில் வசித்து...
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உத்வத் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உள்ளூர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் கணித தேர்வு நடந்தது.
அப்போது தேர்வு அறையில் மாணவன் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியை மாணவனிடம் இருந்து செல்போன் மற்றும் விடைத்தாளை எடுத்துள்ளார்.
பின்னர், மாணவனை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் வேறு விடைத்தாளையும் கொடுத்து அதில் எழுதச் சொன்னார். இதனால் விரக்தியடைந்த...
உறவினர்களை பஞ்சாயத்துக்கு அழைத்ததால் விபரீதம்.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலாஜி, ராமகலா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். பாலாஜி சொந்த ஊரில் சமையல் வேலை செய்கிறார். கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இதுகுறித்து ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உறவினர்கள் பேசிக்...
உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து தருவதாக கூறி, தனியாக ஆண்களை குறிவைத்து பணம் மற்றும் நகைகளை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடித்து அப்பாவி இளைஞர்களை ஏமாற்றினர்.
விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி என்ற இரண்டு ஆண்கள் அந்த இளைஞரை அடையாளம் கண்டு பூனத்திற்கு அறிமுகப்படுத்துவார்கள். திருமணம் செய்து கொள்வதாக...
‘புஷ்பா 2’ உயிரிழந்த ரசிகை குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி.. படக்குழு அறிவிப்பு!!
Tamil 360 Admin - 0
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவியை புஷ்பா 2 படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்ற ரேவதி என்ற...
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் தேவேந்திர சாண்டல். இவருடைய மனைவி டீனா.
இதய நோயாளியான டீனாவை கவனித்து கொள்வதற்காக தனது பணியில் இருந்து ஓய்வு காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த வழியனுப்பு விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார்.
அவருடன் உறவினர்கள், நண்பர்கள் சூழ...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி புதுப்பாடி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுப்பாடி பிராந்திய கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவருடைய மனைவி சுதா (33). இவர்களுக்கு ஸ்டாலின் என்ற மகனும், மும்தாஸ் என்ற மகளும் உள்ளனர். சுதா இரவு 11 மணிக்கு வெளியே சென்று விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் சுதா புதுப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்றுக்...
















