Monday, February 2, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கேரளத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் அடிமாலியைச் சேர்ந்தவர் கிருபா எல்தோஸ் (21). சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி கிருபாவுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டிருந்த கிருபா நேற்றிரவு 8.30 மணியளவில் தனது தோழியின்...
தேனி அல்லிநகரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் லீலாவதி (37). இன்று காலை அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லீலாவதியின் கணவர் சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அதன் பிறகு லீலாவதி தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து...
கடந்த நவம்பர் 30ம் தேதி தான் வருடக்கணக்கில் காதலித்து வந்த அனுவும் நிகிலும் அந்த தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். அதே தேவாலயத்தில் இன்று காலை இருவரும் சடலமாக கிடத்தப்பட்டிருந்த சம்பவம் தேவலாயத்தில் கண்ணீரை வரவழைத்தது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் முறிஞ்சாக்கல் என்ற இடத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் தேனிலவு முடித்து விட்டு ஊர் திரும்பி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியர் உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம்...
கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள வெண்ணலையைச் சேர்ந்தவர் அல்லி. 72 வயதான இவருக்கு பிரதீப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் குடும்பத்துடன் காக்கநாட்டில் வசித்து வருகிறார். பிரதீப் குடிப்பழக்கம் உள்ளதால், பிரதீப்பின் மனைவி மகனுடன் வேறு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அல்லி தனது மகன் பிரதீப்புடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரதீப் அப்பகுதியில் டயர் கடை நடத்தி வந்தார். குடிபோதையில் அக்கம்பக்கத்தினருடன் பிரதீப் அடிக்கடி...
திமுக கவுன்சிலரும், உறவினர்களும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதலர்கள் திருமணமான நிலையில், சப்-கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைது, புகார் கூறியதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியை சேர்ந்தவர்கள் சுமன் (21), ஸ்ரீலேகா(20). இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஆனைமலை உப்பிலியர் சாலையில் வசிக்கும் ஸ்ரீலேகாவின் உறவினர்களான...
யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேனல் தொடங்கி தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர் அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார். தற்போதைய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில், வெற்றி பெறுபவர்களும் உண்டு. அந்தவகையில், நளினி உன்னாகர் என்ற பெண் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சமையல் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார். அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை மொத்தம் 250...
திருச்சியில் விபரீதமாக உடம்பில் டாட்டூ குத்திய விவகாரத்தில் இளைஞர் கைதாகியுள்ள சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்வது, தொப்புளில் தோடு போட்டுக் கொள்வது, கண்களில் கலரிங் செய்து கொள்வது, தலைமுடியை கீரிப்பிள்ளை போன்று வெட்டிக் கொள்வது என இளைஞர்களின் ஃபேஷன் மோகம் தற்போது தலைவிரித்தாடுகிறது. அதிலும் வித்தியாசமாகவும், வில்லங்கமாகவும் தெரியவேண்டும் என்பதற்காக கண்களில் டாட்டூ...
குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய இளைஞரின் உயிர் பிரிந்துள்ளது. இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை. இதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரும் குழந்தைபேறு இல்லை. இதையடுத்து, தந்தையாக வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு பரிகாரங்களை...
காங்கோ நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறுகளால் சூழப்பட்ட, கப்பல் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும் மத்திய காங்கோவில் ஒரு ஆற்றில் நெரிசல் மிகுந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளனாதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் என்றும் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள்...
நெல்லையில் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை கைது செய்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் செல்லும்...