Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
பைக்கில் கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, மரக்கிளை முறித்து மேல் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆண் நண்பர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அன்னா மேரி (21). இவர் தனது நண்பரான கல்லூரி மாணவர் அதாப் அப்பேகர் (21) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இருவரும் எர்ணாகுளம் மாவட்டம் சம்பன்குட்டி கிராமம் அருகே...
ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு, திரும்பிய புதுமண தம்பதியர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் புதுமண தம்பதியரைக் காரில் அழைத்துச் சென்ற இருவரும் சேர்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர் எப்பன் மத்தேய். இவரது மகன் நிகில் எப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிஜு ஜார்ஜ் மகள் அனுவுக்கும் கடந்த...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தாய் இறந்த துக்கம் தாளாமல் அதே நாளில் மகனும் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்- சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் ரத்தினராஜ் (35), இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் ரத்தினராஜின் தாய் முத்தம்மாள் (80) வயோதிகம் காரணமாக உயிரிழந்துள்ளார்,‌ இந்நிலையில் இறந்த தாயின் அருகே ரத்தினராஜ் நாள் முழுவதும் சோகமாக அமர்திருந்ததாகவும்,...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்து சச்சரவு நீடித்த நிலையில், தனது 3 குழந்தைகளின் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்வாயா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜூ. இவருக்கு சீமா என்ற மனைவியும், வன்சிகா (10), அன்சிகா (6), பிரயான்ஷ் (3) என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். இதில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக...
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருமலைசெல்வன் – சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைசெல்வன் – சுகன்யா ஆகியோரிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஒரு மாதத்துக்கு முன்பு ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஆண்டிகாட்டில் உள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சுகன்யா சென்றுள்ளார். மேலும் இவர் அதே பகுதியில் ஒரு சாய பட்டறைக்கு வேலைக்கு...
கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3). கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள...
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருப்பதால் முளை விட்டுவிடும். அப்படி முளைத்து வந்த உருளைக்கிழங்கை உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறும். உருளைக்கிழங்கில் முளைவிட்ட பகுதியை நீக்கிவிடும் பட்சத்தில் இதனை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்று ஒரு புறம் கூறுகின்றனர். ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது, அதனால் புட் பாய்சன் ஏற்படக்கூடும் என்று ஒருசிலர் எச்சரித்து வருகின்றனர். முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை ஆராய்ச்சி அடிப்படையில் அறிந்து...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பலோட் பகுதியில் வசித்து வருபவர் அபிஜித் தேவன். இவரும் இந்துஜா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6ம் தேதி இந்துஜா அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அதன் பிறகு இந்துஜா அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, அபிஜித் தேவன் அறைக்கு சென்று பார்த்தபோது, ​​மனைவி ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். அவர் திருமணமாகாதவர் மற்றும் மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். மேட்ரிமோனி மூலம், ஒரு இளம் பெண் அறிமுகமானார். காலப்போக்கில் இருவரும் நெருங்கி பழகியதால், அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண் கூறியுள்ளார். மேலும், இருவரும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், தனது சகோதரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு பணம்...