Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேனல் தொடங்கி தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர் அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார். தற்போதைய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில், வெற்றி பெறுபவர்களும் உண்டு. அந்தவகையில், நளினி உன்னாகர் என்ற பெண் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சமையல் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார். அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை மொத்தம் 250...
திருச்சியில் விபரீதமாக உடம்பில் டாட்டூ குத்திய விவகாரத்தில் இளைஞர் கைதாகியுள்ள சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்வது, தொப்புளில் தோடு போட்டுக் கொள்வது, கண்களில் கலரிங் செய்து கொள்வது, தலைமுடியை கீரிப்பிள்ளை போன்று வெட்டிக் கொள்வது என இளைஞர்களின் ஃபேஷன் மோகம் தற்போது தலைவிரித்தாடுகிறது. அதிலும் வித்தியாசமாகவும், வில்லங்கமாகவும் தெரியவேண்டும் என்பதற்காக கண்களில் டாட்டூ...
குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய இளைஞரின் உயிர் பிரிந்துள்ளது. இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை. இதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரும் குழந்தைபேறு இல்லை. இதையடுத்து, தந்தையாக வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு பரிகாரங்களை...
காங்கோ நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறுகளால் சூழப்பட்ட, கப்பல் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும் மத்திய காங்கோவில் ஒரு ஆற்றில் நெரிசல் மிகுந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளனாதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் என்றும் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள்...
நெல்லையில் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை கைது செய்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் செல்லும்...
குகேஷூக்கு பாராட்டு விழா நடத்தியதும், பரிசுத்தொகை கொடுத்ததும் நல்ல விஷயம். இப்படி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துறது சந்தோஷமாக இருக்கு” என்று கண்கள் நனைக்க பேசுகிறார் காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா. அது சரி... யார் இந்த காஷிமா என்கிறீர்களா? நம் மீடியாக்கள் காஷிமாவை அந்தளவில் தான் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடின. அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 தங்கப் பதக்கம்...
டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட காதலனை பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொன்றுள்ளார். விரலில் உள்ள நகங்களை வெட்டி கொடுமை படுத்தியுள்ளார். இதுகுறித்து வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பவேரியா கூறுகையில், “நேற்று காலை 11 மணியளவில், அவரது காதலர் தனது மனைவியுடன் அவரது வீட்டில் பிடிபட்டபோது, ​​​​அந்த பெண்ணின் கணவர் கோபமடைந்து தனது மனைவியையும் ரித்திக் வர்மாவையும்...
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் அரோஹல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூரு-கனகபுரா சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த நவம்பர் 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தண்ணீர் தேங்கியது. அதை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர், கழிவறை தொட்டியில் பிறந்த ஆண் குழந்தை பிணமாக கிடப்பதை பார்த்தார். கழிவறை தொட்டியில் குழந்தையின் உடல் சிக்கியிருந்தது தெரியவந்தது. மேலும் கல் நெஞ்சம் கொண்ட தாய்...
திருச்சியில் பாதுகாப்பு உபகரணம் மற்றும் உரிய மருத்துவ பயிற்சி இன்றி வாடிக்கையாளருக்கு நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ கலைஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த ஹரிஹரன், டாட்டூ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் தனது நாக்கை இரண்டு துண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். பின்னர், மும்பை சென்று 2 லட்சம் ரூபாய் செலவு செய்து...
நாமக்கல் மாவட்டம் வலையபட்டி அருகே உள்ள அ.வழவந்தி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் (55), பூங்கொடி (50). இவர்களது மகன் சுரேந்திரனுக்கும் (28), வேட்டாம்பட்டியை சேர்ந்த சினேகாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சினேகா சில மாதங்களிலேயே கணவர் வீட்டாருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை செல்வராஜ் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததை கண்டு அக்கம் பக்கத்தினர் எருமைப்பட்டி போலீசாருக்கு தகவல்...