Saturday, May 18, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் திடீர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். தொழில்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருக்கிறார், தற்போது நிபுணர்களின் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 84 வயதான பிரணாப் முகர்ஜி...
இந்தியாவில் கருப்பாக இருப்பதாக தோழிகள் கேலி, கிண்டல் செய்ததால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - சிந்து தம்பதி. இந்த தம்பதிக்கு ஆர்த்தி, அவானி என்று இரு மகள்கள் உள்ளனர். இதில், 19 வயது ஆர்த்தி நெடுமங்காடு அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். ஆர்த்தியின் தோழிகள் அவரை நீ கருப்பாக இருக்கிறாய் என்று அடிக்கடி கேலி பேசியதாக சொல்லப்படுகிறது....
இந்தியாவில் மனைவி, கணவருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாமியார் அவருக்காக நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் இருக்கும் என்ஐடி பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி நிர்லா. இவருக்கு ஜோதி என்ற மருமகள் உள்ளார். இவர்களுக்குள் எப்போதும் சண்டை வந்த படி இருந்துள்ளது. இதனால் கடந்த 14-ஆம் திகதி ஜோதி திடீரென்று தன் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை...
ஜேர்மன் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியான ஒரு இந்திய பெண், ஜேர்மனி வரலாற்று புத்தகங்களை மாற்றி எழுத வைத்துள்ளார். T20 கிரிக்கெட் வரலாற்றில், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்த முதல் பெண் Anuradha Doddaballapura என்று ஜேர்மன் மாணவர்கள் வருங்காலத்தில் புத்தகங்களில் படிக்கலாம். Anuradha (33), இந்தியாவில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர். ஒரு உயிரியலாளராக தனது முனைவர் பட்டத்திற்காக ஜேர்மனியின் பிராங்பர்ட்டுக்கு 2011ஆம் ஆண்டு...
சமூக வலைதளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு தங்கள் கண்டுபிடிப்புகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 3.8 பில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன, இது கொரோனா நெருக்கடியின் போது உயர்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமூக வலைதளத்தில் பரவும் தடுப்பூசிகள் குறித்த தவறான...
பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவாதைக்குள்ளாக்கப்பட்டு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானின் Nowshera நகரில் 6 வயது மதிக்கத்தக்க சீமா என்ற சிறுமி வீட்டை விட்டு வெளியேறி விளையாட சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் சீமாவை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும், கிடைக்காத காரணத்தினால் உள்ளூர் மசூதியில் இருக்கும் ஒலி பெருக்கி மூலம் மக்களின் உதவியை...
பிரித்தானியா.... பிரித்தானியாவில் கொரோன பரவல் நேரத்தில் சிறப்பான சேவைகளில் ஈடுபட்ட நபர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ராயல் அகாடமி சிறப்பு விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும், தங்கள் உயிரைப் பற்றியும் பொருட்படுத்தாமல், சிறப்பாக செயலாற்றி வரும் நபர்களுக்கு ஒவ்வொரு நாடுகளிலும், அவர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரித்தானியாவில், கொரோனா பரவல் தடுப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட...
13 ஆண்டுகளுக்கு முன் நிலத்தகராறில் அண்ணனை, தம்பி வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்தும் தந்தையை கொன்றவனை மகன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை சேர்ந்தவர் அந்தோனி ராஜ். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் ஆரோக்கியசாமி மற்றும் ரோக்குராஜ். இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்களுக்கு இருங்களூர் நடுகரை ஆற்றோர பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில்...
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியாவும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்திடம் மோசடி செய்ததாக அவரது தந்தை கே.கே.சிங், பாட்னா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீது பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை,...