Thursday, July 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்........ தமிழகத்தில் பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை...
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய சம்பவம் உறவினர்களை திகைக்க வைத்துள்ளது. முடி ஏற்றுமதி செய்யும் வணிகத்தை நடத்தி வரும் 57 வயதான சீனிவாஸ் மூர்த்தி என்ற நபரே மறைந்த தனது மனைவியின் மீதுள்ள பாசத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி அனைவரையும் கலங்க வைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் சீனிவாஸின் மனைவி மாதவி இரண்டு மகள்களுடன் காரில் திருப்தி...
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் சடலமாக கிடந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்தா கிராமத்தில் கேவல்ராம் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை விலைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தனர். பண்ணையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய வீடு ஒன்றை அமைத்திருந்தனர்....
தமிழகத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட 20 வயது இளம்பெண் 40 வயது நபருடன் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். 40 வயது மதிக்கத்தக்க இவர் மலையேற்ற பயிற்சியாளராக உள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், ஜீவாதார் என்ற தொண்ட நிறுவனம் உள்ளது. சென்னையை சேர்ந்த பிரபு சுந்தர் என்பவர் இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக உள்ளார். ஆரோக்யான் என்ற...
பிரான்ஸ் தலைநகரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் இரண்டா வட்டாரத்தில் நள்ளிரவு 1 மணிக்கு பொலிசாருக்கு அவசரகால அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, பொலிசார் சம்பவம் நடந்த பகுதியான rue Réaumur வீதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் வேகமாக வெளியேறுவதைக் கண்ட பொலிசார், அவரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில்...
பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் தீ விபத்து ஏற்பட்டதால், சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் புகைகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு...
கேரள விமான விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் இறுதிச்சடங்கில் தந்தை கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் ரெம்யா என்பவரும், அவரின் மகள் Shivathmika-வும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் ரெய்யாவின் மகன் Yadhudev அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த...
இந்தியாவில்...... இந்தியாவில் பணக்கார தொழிலதிபர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு பொலிசார் வேடத்தில் வந்த கொள்ளையர்கள் அவர் மனைவியை ஏமாற்றி லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் ஷா. இவர் தொழிலபதிபர் ஆவார். இவர் மனைவி நம்ரதா தேவி. நிரஞ்சன் ஷா கடந்த 15 நாட்களாக வெளியூரில் இருந்த நிலையில் சமீபத்தில் ஊருக்கு திரும்பி உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர்...
ஆலியா - மானசா ஜோடியின் அழகிய குழந்தை நடனமாடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஆலியா - மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். தற்போது அல்லு அர்ஜூனின் 'அல வைக்குந்தபுரமுலோ' படத்தில் இருந்து ராமுலோ ராமுலா பாட்டுக்கு தனது மகளை டான்ஸ் ஆட சொல்லித்தருகிறார் ஆல்யா மானஸா. இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி தேவதையின் செயலை ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.   View...
சாத்தான் குளத்தில் பொலிசார் விசாரணையில் தந்தை மகன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட உயிரிழந்ததாலல் காவல்ஆய்வாளர் உட்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஸ்.ஐ. பால்துறை என்பவர் கடந்த யூலை 8ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு 14ம் திகதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா...